50 ஆண்டுகளாக கடலில் மிதந்த கடிதம்

50 ஆண்டுகளாக கடலில் மிதந்த கடிதம்


♦50 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய பெருங்கடலில் வீசப்பட்ட பாட்டிலில் அடைக்கப்பட்ட கடிதம் ஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ளது.

♦தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஐரே தீபகற்பத்தில் உள்ள டாலியா கடற்கரையில் பால் என்பவரும் அவரது 9 வயது மகன் ஜியா எலியட்டும் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது கடற்கரை மணலில் பாட்டில் ஒன்று கிடந்துள்ளது.

♦அந்த பாட்டிலுக்குள் கடிதம் ஒன்றும் அடைக்கப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தை எடுத்து பார்த்ததும், அது 1969ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி , அப்போது 13 வயதான கில்மோரே என்பவர் அந்த கடிதத்தை எழுதியது தெரிய வந்தது.

♦அந்த கடிதத்தில் ''இங்கிலாந்தில் இருந்து மெல்போர்ன் நகரத்திற்கு குடிபெயர்கிறேன், கப்பலில் இருந்து கடிதத்தை எழுதுகிறேன் , யார் இந்த கடிதத்தை பெறுகிறீர்களோ அவர்கள் பதில் அனுப்புங்கள்'' என அதில் கூறப்பட்டுள்ளது.

♦இந்நிலையில் அந்தக் கடிதத்தை எழுதிய கில்மோராவுக்கு எலியட் தற்போது பதில் அனுப்பியுள்ளார்.

♦கடிதம் எழுதியபோது 13 வயதான கில்மோரே, தற்போது 63 வயதில் மீண்டும் இங்கிலாந்துக்கே குடிபெயர்ந்தது வாழ்ந்து வருகிறார்.

♦Friends social media
Share on Google Plus

About Admin

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Post a Comment:

Post a Comment