டிப்ளமோ படித்தவர்கள் மட்டுமே இளநிலை பொறியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் : அலகாபாத் உயர்நீதிமன்றம்

டிப்ளமோ படித்தவர்கள் மட்டுமே இளநிலை பொறியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் : அலகாபாத் உயர்நீதிமன்றம் 


உத்தர பிரதேச மாநிலத்தில் காலியாகவுள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக, விண்ணப்பங்களை வரவேற்று அரசு சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும், இன்ஜினியரிங் பட்டப்படிப்பு பயின்றவர்கள் விண்ணப்பிக்க முடியாது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 



இதனால் இளநிலை பொறியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியாத சிலர், அரசின் விளம்பரத்தை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.கே.நாராயணா, ரமேஷ் சின்ஹா, பங்கஜ் பாட்டியா ஆகியோர் அடங்கிய அமர்வு, பதவிகளுக்கு தேவையான தகுதிகளை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது எனவும், அதில் நீதித்துறை ஆய்வுக்கு அவசியமில்லை என கருதுவதாகவும் தெரிவித்தனர். மேலும் விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளது போல் டிப்ளமோ படித்தவர்கள் மட்டுமே, இளநிலை பொறியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவித்தனர்.
Share on Google Plus

About Admin

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Post a Comment:

Post a Comment