அறிவோம் ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டம்

அறிவோம் ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டம் 


இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அவற்றில் குறிப்பாக, மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்முறை உயர்கல்வியை பயிலும் விரும்பும் மாணவர்களுக்கு, உரிய பாடத்திட்டங்களை இந்த இரு கல்வி முறைகளும் பெற்றுள்ளதாக நிலவும் கருத்தே, பிரதானம். இதில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு முதலிடம் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. 


இன்று மாநகரம், நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் பெருகி வரும் பள்ளிகள் இதற்கு சான்று.சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு அடுத்ததாக, 'கவுன்சில் பார் தி இந்தியன் ஸ்கூல் சர்டிபிகேட் எக்சாமினேஷன்' பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும், &'இந்தியன் சர்ட்பிகேட் ஆப் செகண்டரி எஜுகேஷன்' எனும் ஐ.சி.எஸ்.இ., தேர்வு முறை குறிப்பிடத்தக்கது. என்.சி.இ.ஆர்.டி., அமைப்பால், வலிமையான பாடத்திட்டத்தை கொண்டுள்ள ஐ.சி.எஸ்.இ., இந்திய நெறிகளுக்கு முக்கியத்துவம் அளித்தாலும், சர்வதேச கல்வி முறையை சார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. 


இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்த கல்வி முறையை நாடு முழுவதிலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் பின்பற்றி வருகின்றன.சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை போல் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தராமல் ஐ.சி.எஸ்.இ., மொழியியல், வரலாறு, புவியியல், உளவியல், பொருளாதாரம், சுற்றுச்சூழல், கலை, இசை, உடற்கல்வி, தொழில்நுட்ப பாடங்களுக்கும் சம அளவு முக்கியத்துவத்தை வழங்குகிறது. 


இந்த கல்வி முறையானது சிறப்பான ஆங்கில வழி கல்வியை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கி வருகிறது. அந்த வகையில் தேசியளவில் முக்கியத்துவம் பெற்ற கல்வி முறைகளில் இதுவும் ஒன்று.சிறப்பம்சங்கள்:

* மேனேஜ்மெண்ட் மற்றும் ஹூமானிடிஸ் ஆகிய துறைகளில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறப்பான பாட அமைப்பை இந்த கல்வி முறை பெற்றுள்ளது.* பள்ளிகள் சுயமாக செயல்படவும், புத்தாக்க திட்டங்களுக்கு வாய்ப்பளித்து, மாணவர்களின் ஒட்டு மொத்த திறன் வளர்ப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.


* அனைத்து துறை சார்ந்த பாடங்களிலும் விரிவான மற்றும் முழுமையான பாடங்களை ஐ.சி.எஸ்.இ., மாணவர்களுக்கு வழங்குகிறது.

* இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள அனைத்து உயர்நிலை கல்வி நிறுவனங்களாலும் ஐ.சி.எஸ்.இ., சான்றிதழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

* டோபல், ஐ.இ.எல்.டி.எஸ்., போன்ற ஆங்கில தகுதி தேர்வுகளை இந்த பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் எளிதாக தேர்ச்சி பெற முடியும்.தேர்வு முறை: ஆண்டிற்கு மூன்று பருவ தேர்வுகள் நடத்தப்படும் அதேநேரம், எழுத்துத் தேர்வுக்கு மட்டுமின்றி, செயல்முறை தேர்வுகளின் மூலமும் மாணவர்கள் மதிப்பிடப்படுகிறார்கள்.விபரங்களுக்கு: www.cisce.org
Share on Google Plus

About Admin

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Post a Comment:

Post a Comment