ஏசி உள்ளிட்ட 10 அம்சங்கள் இருந்தால் குடும்ப அட்டை சலுகை ரத்து:

ஏசி உள்ளிட்ட 10 அம்சங்கள் இருந்தால் குடும்ப அட்டை சலுகை ரத்து:


▪தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைகளை ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆய்வுப் பணியும் தொடங்கியுள்ளது. ஏசி உள்ளிட்ட 10 அம்சங்களில் ஏதேனும் ஒன்று இருந்தலும் முன்னுரிமை குடும்ப அட்டைக்கான சலுகை பறிக்கப்படுகிறது.

▪வசதி படைத்தவர்கள், மானியத்தில் பொருட்களை பெறும் குடும்ப அட்டைகளை பயன்படுத்துவதாக தொடர் புகார்கள் இருந்தன. அதுமட்டுமின்றி போலி குடும்ப அட்டைகள் புழக்கத்தில் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைகளை ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆகவே ஆய்வுப் பணியும் தொடங்கியுள்ளது.

▪அதன்படி முன்னுரிமைப் பிரிவில் இருந்து நீக்கப்பட வேண்டிய குடும்பங்களுக்கான விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன. வருமான வரிச் செலுத்தும் நபரை குறைந்தது ஒரு உறுப்பினராக கொண்ட குடும்பம், தொழில் வரிச் செலுத்துவோரை உறுப்பினராக கொண்ட குடும்பம், 5 ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்துள்ள விவசாயியை கொண்ட குடும்பம், மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அல்லது ஓய்வு பெற்றவரை உறுப்பினராகக் கொண்ட குடும்பம், 4 சக்கர வாகனத்தை சொந்த பயன்பாட்டுக்கு வைத்துள்ள குடும்பம், ஏசி வைத்திருக்கும் குடும்பம், 3 அல்லது அதற்கும் மேல் அறைகளை கொண்ட கான்கிரீட் வீடுகள் உள்ள குடும்பம், வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படுத்தும் குடும்பம், அனைத்து ஆதாரங்களில் இருந்து பெறப்படும் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்கும் மேல் உள்ள குடும்பம் ஆகியோர்கள் இதற்கு முன் சலுகை பெற்றுவந்தால் இனிமேல் அது நிறுத்தப்படும்.

▪அரசின் விதிப்படி, மேற்கூறிய 10-ல் ஏதாவது ஒன்று இருந்தாலும் இந்தக் குடும்பங்கள் மானியம் பெற தகுதியில்லாததாக கணக்கிடப்படுகிறது. இக்குடும்பங்கள் முன்னுரிமை பெற தகுதியுள்ள குடும்ப அட்டைகளை பயன்படுத்தினால் தற்போது அது மாற்றப்படும்.

➖➖➖➖➖➖➖➖➖➖➖
Share on Google Plus

About Admin

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Post a Comment:

Post a Comment